இன்று பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அது தொடர்பாக குன்றத்துாரில் உள்ள செம்பரம்பாக்கம் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிமீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன்
முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். தற்போது வடகிழக்கு பருவ மழையினாலும், கிருஷ்ணா நீர் வரத்தினாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து உள்ள படியால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயரும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்கு
முறை வழிகாட்டுதலின்படி அணைக்கு வரும் நீர் வரத்து அவ்வாறே வெளியேற்றப்பட வேண்டும். தற்போது பெய்து வரும் அடை மழையால் ஏரியின் நீர் வரத்து நொடிக்கு 4,-02-7 கன அடியாக உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் இன்று 25.11.2020 மதியம் 12 மணியளவில் 1000 கன அடி திறக்கப்படுகிறது. நீர் வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும்.

எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Translate »
error: Content is protected !!