யானையை தேடும் பணியில் சிக்கல்-வனத்துறையினர் தவிப்பு

ஆனைகட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் சிக்கல் ஏற்படுள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையான ஆனைகட்டி அட்டப்பாடி பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.

மழை பொழிவினால் யானையை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். கடும் சவால்களுடன் இரண்டு குழுக்கள் வனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை மற்ற யானைகளுடன் இணைந்து நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!