மீமிசல் காவல் நிலையத்தில் டிஐஜி ஆனிவிஜயா ஆய்வு

Updated by M. Raja Muhammed, MIMISAL, 30, NOV, 2020, 23:26

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் சப் டிவிஷனில் உள்ள மீமிசல் காவல் நிலையத்தில் திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று காலை மீமிசல் காவல் நிலையத்துக்கு வந்த ஆனிவிஜயா அங்குள்ள எப்ஐஆர் விவரங்கள், புகார் பெறும் முறைகள், குற்றச் சம்பவங்கள் குறித்து சரக டிஎஸ்பி சிவராமனிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் காவல்துறையினர் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டும், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை

மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகள், அறிவுரைகளை காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார். பின்பு காவல்நிலைய வளாகத்தை சுற்றிப்பார்த்த ஆனிவிஜயா ஸ்டேஷன் வளாகத்தில் தென்னங்கன்றை நட்டார். மேலும் அங்குள்ள தோட்டத்தில் பூத்துக்குலுங்கிய பூச்செடிகளை பார்த்து ரசித்தார். இந்த நிகழ்வின் போது புதுக்கோட்டை ஏடிஎஸ்பி கீதா, கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி சிவராமன், மற்றும் மாவட்ட சிறப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் எஸ்ஐ அமுதசுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!