சென்னை கோடம்பாக்கத்தில் பிளம்பர் கத்தியால் குத்திக் கொலை

சென்னை கோடம்பாக்கத்தில் குடிபோதையில் நடந்த தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சென்னை சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்தவர் உபால்டு (வயது 33). பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம், இரவு 8.30 மணியளவில் சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தில் உள்ள மாநகராட்சி மைதானத்தில்
தனது நண்பர்கள் ஐயப்பன் மற்றும் சிலருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து உபால்டை கழுத்து, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்தவெள்ளத்தில் உபால்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் ஐயப்பன் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும்
கோடம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த உபால்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன நபரின் தந்தை உதயக்கனி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து
கொலையாளியான ஐயப்பன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!