டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் போராட்டம்.

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Translate »
error: Content is protected !!