பெண் மீது மின்சாரம் தாக்கியதால் காப்பாற்ற சென்ற ஒரு ஆண் பலி 

துணி காயப்போட்ட பெண் மீது மின்சாரம் தாக்கியபோது காப்பாத்த சென்ற இரண்டு ஆண்களுக்கு மின்சாரம் தாக்கியதில் ஒரு ஆண் பலி 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் முருகலட்சுமி என்ற பெண் வீட்டின் அருகே  துணி காயப்போட்ட  கட்டி இருந்த கம்பி மீது துணி காயப்போட்ட போது அவர் மீது மின்சாரம் தாக்கியது, அப்போது அருகே இருந்த பெட்டிக்கடை நடத்தி வரும் முகமதுயாசின் எனபவர் அவரை காப்பாற்ற சென்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்க அருகே இருந்த வேல்முருகன் என்ற இளைஞர் இருவரையும் காப்பாற்ற சென்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியதாகவும், அதில் காயம் அடைந்த மூவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற முகமதுயாசின் என்ற ஆண் மின்சாரம் தாக்கியதில் இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மேலும் துணி காயப்போட்ட சென்ற முருகலட்சுமி மற்றும் வேல்முருகன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பெரியகுளம்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இச்சமபவம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது முகமதுயாசின் என்பவர் வீடுகட்டி வருவதால் தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் கட்டிய கம்பி மூலம் மின்சாரம் பாய்ந்து துணிகாயப்போட்ட போது மின்சாரம் தாக்கி உள்ளதாக தெரிவித்தனர். மின்சாரம் தாக்கிய பெண்ணை காப்பாற்ற சென்றவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Translate »
error: Content is protected !!