காட்ரோடு அருகே நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி

காட்ரோடு அருகே உள்ள கட்டிடத்திற்கு தோண்டப்பட்ட குழியில் உள்ள நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார் 
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காட்ரோடு அருகே உள்ள இடத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்துறை சார்பாக நெல் கொள்முதல் நிலையம்  கட்டிடபணிகள் நடைபெற்று வருகிறது இதில் கட்டிடப் பணிகளுக்காக தோண்டப்பட்ட  குழியில் உள்ள நீரில் நூல்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜோதி மகன் ஹரீஸ் என்ற ஆறு வயது சிறுவன் குழியில் உள்ள நீரில் தவறி விழுந்ததில் மூழ்கி பரிதாப பலி. 
உடலை மீட்ட உறவினர்கள் கட்டுமான பணிகள் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி கட்டப்பட்டு வந்ததால் இதனால் சிறுவன் பலியானதாக கூறி உறவினர்கள் கட்டுமான பணி ஒப்பந்தகாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிறுவனின் உடலை வைத்து சாலைமறியல் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேவதானப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உறவினரிடம் பேச்சுவார்த்தைக்கு பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டதுஇதனால் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு இதைத்தொடர்ந்து உறவினர்கள் சாலை ஓரமாக அமர்ந்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறியுள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது
Translate »
error: Content is protected !!