மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

திருச்சி மாநகராட்சிகுட்பட்ட ஏழு மற்றும் எட்டாவது பகுதிகளில் சாலைகள் சரிவர அமைக்கவில்லை,கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரவில்லை,குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது,மின் விளக்குகள் அமைத்து தரவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறியும் உடனடியாக அப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் மக்கள் உரிமை மீட்பு இயக்கம் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திருச்சி மாநகராட்சி அலுவலுகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்களை மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தனர்.கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றவில்லையென்றால்தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!