மனைவி பிரிந்து சென்றதால் அரசு டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை

சென்னை ராயப்பேட்டைஅரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் வீட்டில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திரிவேணி. அகர்வால் கண் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மருத்துவர் திரிவேணி கணவரைப் பிரிந்து குழந்தைகளோடு தந்தை வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மருத்துவர் வெங்கடேசன் இன்று மாலை தனது வீட்டில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். குமரன் நகர் போலீசார் இது தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குமரன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!