தனது கடையில் பணிபுரியும் சம்பளம் கொடுப்பதில் தகராறு: பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மீது போலீசில் புகார்

சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண்களுக்கு சம்பளம் கொடுப்பதில் நடந்த தகராறு தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆர்ஏபுரம், விசாலாட்சி தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 43). இவரது 17 மற்றும் 18 வயதுடைய மகள் இருவரும் சென்னை ஆர்ஏ புரம் பாகிரதி தெருவில் உள்ள சினிமா பாடகள் புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தனர். மாத சம்பளம் எட்டாயிரம் ரூபாய் என்று பேசி பணி செய்து வந்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணி செய்தால் 300 ரூபாய் கையில் தருவதாக கூறியுள்ளனர். கடந்த

ஞாயிற்றுக்கிழமை பணி செய்து முடித்த பின்னர் புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் ரூ. 200 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு பெண்களும் மனமுடைந்து அழுது புலம்பி உள்ளனர். இதனை தெரிந்துகொண்ட புஷ்பவனம் குப்புசாமி நேற்று வேலைக்கு வந்த இரண்டு பெண்களையும் வீட்டிலேயே அடைத்து வைத்து நீங்கள் எப்படி நேற்று எங்களைப்பற்றி பேசலாம் எனக் கேள்வி கேட்டுள்ளார். இது தொடர்பாக அபிராமபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக இருதரப்பினரையும அழைத்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இந்த விவகாரத்தால் அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!