திருச்சியில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு

நிலப்பிரச்சனையில் தி.மு. ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு.

 திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மூங்கில்பட்டி என்கிற  பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. இவர் தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை ரித்திக் ஆகியோருடன் வசித்து வருகிறார்.இவர்களுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் வசித்து அந்த நிலத்திலையே விவசாயம் செய்து வருகிறார்.

அந்த நிலத்துற்கு அருகிலேயே அவரின் உறவினர்களுக்கும் சொந்தமான நிலம் இருந்து வருகிறது. அந்த நிலத்தில் அவர்களும் விவசாயமும் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த இடம் தொடர்பாக அவர்களுக்குள்ளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பழனிச்சாமி முசிறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று பெரிய பள்ளிபாளையத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமையில் சிலர் பழனிச்சாமி நிலத்திற்கு செல்லும் வழியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் பறித்து உள்ளனர். இது குறித்து அவர் கேட்ட போது அவரையும் அவர் மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இதனால் மன வருத்தம் அடைந்த பழனிச்சாமி இன்று தன் மனைவி பிரியா மற்றும் குழந்தை ரித்திக்குடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து குடும்பத்தினருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர்களை அழைத்து சென்றனர்.தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், தங்களை மிரட்டும் தி.மு. ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!