போலீஸ் பெயரால் கொள்ளை; 8 பேர் கொண்ட கும்பலில் 5 பேர் கைது

சென்னை அசோக்நகரில் போலீஸ் என கூறி ரூ. 12 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அஷோக் நகரில் கடந்த 9ம் தேதி பாண்டியன் என்பவர் வீட்டில் போலீஸ் என கூறிய மர்ம நபர்கள் 8 பேர் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். பாண்டியன் வீட்டில் கள்ளநோட்டு இருப்பதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

பின்பு அவர்கள் பாண்டியன் வீட்டில் இருந்த ரூ. 12 லட்சம் பணம் மற்றும் 45 சவரன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அது தொடர்பாக பாண்டியன் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அது தொடர்பாக சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்

 அதனையடுத்து இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட அஷோக் நகரை சேர்ந்த சிவா (26), சேலத்தைச் சேர்ந்த கார் டிரைவர் அஜித்குமார் (26), திருவொற்றியூர் லாம்பி () ரூபன் (36), ராஜேந்திரன் (40), சதீஷ் (31) ஆகிய 5 பேரையும்  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இரு சக்கரனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Translate »
error: Content is protected !!