மூத்த ஊடகவியலாளர் சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பார் மறைந்தார்… ஆழ்ந்த இரங்கல்

மூத்த ஊடகவியலாளர் சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பார் மறைந்தார்ஆழ்ந்த இரங்கல்

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாரும் லண்டன் ஐபிசி வானொலியின் முன்னாள் அறிவிப்பாளருமான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் இன்று காலை எட்டு மணி அளவில் காலமானார்

” 2002இல் ஏப்ரல் 10ஆம் தேதியன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகள் தலைவர்  பிரபாகரன்

நான் உங்கள் பரம ரசிகன் ஐயாஎன்று ஒருவரைப் பார்த்து சொன்னார்.

அவருடைய பெயர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

— 1980இல் தமிழில் மட்டைப் பந்து ஆட்டத்தின் வர்ணனைகளை ஆரம்பித்தார். தனித் தமிழ்ப் பதங்களால் உலகப் புகழ் பெற்றவர்.

—–கருத்தாழமிக்க பல நூல்களை எழுதியுள்ள  மூத்த ஊடகவியலாளர் அய்யா சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள்  இன்று (22_12_2020) காலமானார்.

ஒவ்வொரு ஆன்மாவும் நிச்சயமாக இறைவனிடமிருந்தே வருகின்றன . நிச்சயமாக மீண்டும் இறைவனிடமே மீள்கின்றன

எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

Translate »
error: Content is protected !!