நில அபகரிப்பு வழக்கில் திமுக பிரமுகர் கைது

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சென்னை எம்எல்ஏ விடுதியில் தங்கியிருந்த திமுக பிரமுகரை நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அழைத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:–  நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர்மீது நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நில அபகரிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தாமஸ் ஆல்வா எடிசன் முன் ஜாமீன் பெறுவதற்காக சென்னை வந்திருந்தார். சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் எம் எல் ஏ விடுதியில் அவர் தங்கி இருந்தார். இந்நிலையில் இன்று (23.9.2020) காலை சென்னை வந்த நாகப்பட்டினம் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏல்ஏ விடுதியில் வைத்து தாமசை கைது செய்து நாகப்பட்டினம் அழைத்து சென்றதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!