ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம் என தமிழக முதல்வர் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையை தீர்க்காவிட்டால் வரும் தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டுக்கள் நோட்டாவுக்குஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு அரங்கமா நகர் நல சங்கம் ஹேமநாதன் பேட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மனச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி  தரிசித்து விட்டு பின்னர்

ராஜகோபுரம் எதிரே பொது மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு பேசியபோது…. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பல ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்தார். அவற்றை அனைத்தும் செயல்படுத்தி உள்ளோம் என பேசினார். மேலும் ஸ்ரீரங்கம் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் தமிழக முதல்வர் பேச்சைக் கேட்க வந்தவர்கள் அடிமனை பிரச்சனை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,

ஸ்ரீரங்கம் தொகுதியை பொறுத்தவரை பத்தாயிரம் குடும்பத்திற்கு மேலாக வாழ்ந்து வருகிறோம், 2011 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிமனை பிரச்சினையை தீர்ப்போம் என வாக்குறுதி கொடுத்தார், ஆனால் அந்த வாக்குறுதியை இதுவரை அம்மா வழியில் செயல்பட்டு வருகிறோம் என கூறி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது என்றும்,

மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்றரை மாத காலத்திற்குள் அடிமனை பிரச்சினை குறித்து தீர்வு காணாவிட்டால் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க கூடிய நிலை வந்துவிடும் எனவே  இப்பிரச்சினையை விரைந்து தீர்க்க முதல்வர் பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் அடிமையை உரிமை மீட்புக்குழு அரங்கமா நல சங்கம் சார்பில் கேட்டுக் கொண்டனர்.

Translate »
error: Content is protected !!