மலையாள பாடலாசிரியர் மாரடைப்பால் காலமானார்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற மலையாள திரையுலக பாடலாசிரியர் அனில் பனசூரன் மாரடைப்பால் இன்று காலமானார்.

கேரளாவில் கவிஞராகவும் மற்றும் மலையாள திரையுலகில் பாடலாசிரியராகவும் இருந்து வந்தவர் அனில் பனசூரன் (வயது 51). சமீபத்தில் இவர் மயங்கி விழுந்துள்ளார்சுவாச கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இன்றிரவு 8.10 மணியளவில் உயிரிழந்து உள்ளார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நிலையிலேயே அதில் பலனின்றி அவர் காலமானார்

தொடக்க காலத்தில் வழக்கறிஞராக அவர் பணிபுரிந்து வந்துள்ளார்இதன்பின்னர் கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்த அரபிக்கத என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் பெற்றார். அவர் படத்திலும் நடித்துள்ளார்மலையாளத்தில் புகழ் பெற்ற கவிஞர்களில் அவரும் ஒருவர்அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

 

 

Translate »
error: Content is protected !!