ஜெயலலிதா கோவில் திறப்பு விழா: முதல்வருக்கு நேரில் அழைப்பு

மதுரை மாவட்டம், டி.குன்னத்தூரில் 30-ந்தேதி நடைபெறும் ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோவில் கட்டி உள்ளார்.

இந்த கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் திறப்பு விழா வரும் 30-ந்தேதி நடக்க உள்ளது. இந்த விழா தொடர்பாக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்..க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம் ஆகியோர் நேற்று சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

 

 

Translate »
error: Content is protected !!