தஞ்சாவூர் அருகே மின் கம்பி மீது தனியார் பஸ் உரசியதில் 5 பயணிகள் பலி

தஞ்சாவூர் அருகே இன்று காலை உயர் மின் அழுத்த கம்பி மீது தனியார் பஸ் உரசியதில், அதில் பயணம் செய்த 5 பயணிகள் பலியானார்கள்.

தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு கனநாதன் என்னும் தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, செல்லும் வழித்தடத்தில் இன்று சென்று கொண்டிருக்கும் போது, கண்டியூர் அருகே சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் பஸ்சின் பாகம் உரசியுள்ளது.

இதனால், பஸ் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!