வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா, ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகா பகுதிகளிலிருந்து இன்று விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஜனவரி 20 -21 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த அளவு எங்கும் மழை பெய்யவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை

 

Translate »
error: Content is protected !!