ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி வந்த முதியவர் உயிரிழப்பு

சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு வந்த கரை வேட்டி அணிந்த முதியவர் பிளாட்பாரத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபல நட்சத்திர ஓட்டல் உள்ளது. நேற்று மதியம் இந்த ஓட்டல் முன்புறம் உள்ள சாலை ஓர பிளாட்பார்மில் அதிமுக கரை வேட்டி கட்டி அணிந்த ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். அது தொடர்பாக மயிலாப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து போன நபர் சுமார் 75 வயது மதிக்கதக்க ஆண் நபர் எனவும் மெரீனா பீச்சில் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு நிகழ்ச்சிக்காக வந்தவர் என்பது மட்டும் தெரியவந்தது. அது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!