நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் பாட்டி வீட்டில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்றார். நேற்று முன்தினம் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

 

Translate »
error: Content is protected !!