தமிழகத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது,

தமிழகத்தில் நேற்று 284 ஆண்கள், 194 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 149 பேரும், கோவையில் 62 பேரும், செங்கல்பட்டில் 36 பேரும், திருவள்ளூரில் 23 பேரும், திருப்பூரில் 19 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூரில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 43 ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,396 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 493 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 504 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 309 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 31 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தகவல் தமிழகத்தில் நேற்று 618 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 63 ஆயிரம் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் 7 ஆயிரத்து 727 சுகாதாரப்பணியாளர் மற்றும் 3 ஆயிரத்து 941 முன்கள பணியாளர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 768 பேருக்குகோவிஷீல்டுதடுப்பு மருந்தும், 133 சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் 14 முன்கள பணியாளர் என மொத்தம் 147 பேருக்குகோவேக்சின்தடுப்பு மருந்தும் என நேற்று மொத்தம் 11 ஆயிரத்து 815 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!