10 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு.. 3வது நாளாக போலீசார் தீவிர விசாரணை

கொடைக்கானலில் பள்ளி வளாகத்தில் 10 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு 3வது நாளாக இன்றும் விசாரணை தொடர்கிறது.

பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த தாண்டிகுடி போலீசார், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் 2 நாட்களாக தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று 3வது நாளாக சிறுமியின் பெற்றோர் பாச்சலூருக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளனர்.

Translate »
error: Content is protected !!