பசியால் தங்கும் விடுதியின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானை

தமிழக-கர்நாடக எல்லையான பந்திப்பூர் புலிகள் சரணாலயம் அருகே உள்ள தங்கும் விடுதியின் ஜன்னலை உடைத்த காட்டு யானை, அதன் தலையை உள்ளே நுழைத்து உணவு தேடும் வீடியோ வெளியாகி உள்ளது.

பசியால் உணவு தேடி அலைந்த காட்டு யானை, விடுதியின் சமையலறை ஜன்னலை உடைத்து, உணவு தேடி வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

விடுதியில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியும் வெளியே வராத யானை சத்தம் போட்டு சுமார் அரை மணி நேரம் கழித்து உணவு கிடைக்காததால் அங்கிருந்து சென்றது. இதனை ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!