தனிநபர் விவரங்களை வெளியிட்டால் நடவடிக்கை

 

தனி நபர் விவரங்களை, அவரது ஒப்புதலின்றி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தளமான டிவிட்டர் தெரிவித்துள்ளது.

தனிநபர் உரிமைகளை காப்பது தொடர்பாக டிவிட்டர் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒருவரின் புகைப்படம், முகவரி, அடையாள அட்டை, மொபைல் எண்கள், வங்கி கணக்கு விவரங்கள், பயோமெட்ரிக் உள்ளிட்ட அடையாளங்கள் அவரது ஒப்புதல் இன்றி வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என டிவிட்டர் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!