பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் அதிரடி கைது!

மும்பையில் நடுக்கடலில் கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகரின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மும்பையிலிருந்து நேற்று மதியம் ‘எம்பிரஸ்’ என்ற சொகுசுக் கப்பல், கோவாவுக்குச் சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டது. இந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கப்பல் நடுக்கடலை நெருங்கியபோது பயணிகள் சிலர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி கொண்டிருப்பதை உறுதி செய்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கப்பலில் இருந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் அவர்கள் சினிமா, ஃபேஷன் துறைகளை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பிறகு, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சொகுசு கப்பலில் பயணித்த மீதமுள்ளவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!