20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்.. அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

நடிகர் சூர்யா கைவசம் ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் உள்ளது. இதில், ஜெய் பீம் படம் நவம்பர் 2 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்க போவதாக நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து சூர்யா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!