நடிகை பூனம் பாண்டேவை கடுமையாக தாக்கிய கணவர் – ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை பூனம் பாண்டேவை அவரது காதல் கணவர் சாம் பாம்பே கடுமையாக தாக்கியதில் அவரது தலை, கண், முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் பூனம் பாண்டே சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சாம் பாம்பே கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியில் பிரபலமான நடிகையாகவும், பிரபல மாடலாகவும் பூனம் பாண்டே வலம் வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளரும், நடிகருமான சாம் பாம்பேவை இவர் காதலித்து திருமணம் செய்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் தேனிலவுக்காக கோவா சென்றிருந்தனர். அப்போது, காதல் கணவர் தன்னை தாக்கியதாக பூனம் பாண்டே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, கோவா போலீசார் சாம் பாம்பேவை கைது செய்தனர். படுகாயமடைந்த பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Translate »
error: Content is protected !!