தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!

ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 176 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு பறக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

விமானி திறமையாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இதனால் யாருக்கும் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினர். பின், 170 பயணிகள் ஷார்ஜாவுக்கு மாற்று விமானத்தில் புறப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!