விமான டிக்கெட் 2 மடங்காக உயர்வு

சென்னை விமான நிலையத்தில், டிக்கெட் கட்டணம் 2 மடங்காக உயர்ந்துள்ளதால் பயணிகள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்தூக்குடி செல்வதற்கான டிக்கெட் கட்டணம் 4 ஆயிரத்து 200-ல் இருந்து, 10 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது. மதுரைக்கான கட்டணம் 3 ஆயிரத்து 800-ல் இருந்து 7 ஆயிரத்து 700 முதல் 9 ஆயிரத்து 600 வரை அதிகரித்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கோவா செல்லும் விமானங்களிலும் கட்டணம் அதிகரித்துள்ளது. கட்டண உயர்வு குறித்து அதிகாரிகளிடம் கேட்கும்போது, விமானங்களில் பல அடுக்கு கட்டணங்கள் உள்ளதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக குறைந்த கட்டணம், மீடியம் கட்டணம் கொண்ட டிக்கெட்கள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், தற்போது அதிக கட்டணம் கொண்ட இருக்கைகள் மட்டுமே உள்ளதாகவும், அதுவே பயணிகளுக்கு கட்டண உயா்வு போல் தெரிவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்

Translate »
error: Content is protected !!