குடிபோதையில் ஆயுதங்களுடன் ஊருக்குள் புகுந்த கும்பல் கைது

சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் குடிபோதையில் ஊருக்குள் புகுந்த கும்பல், வாகனங்களின் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரை ஓடுகளை அடித்து நொறுக்கியது. இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தங்கமாபுரிப்பட்டினம் பகுதியில் நள்ளிரவில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் லாரியின் கண்ணாடிகளை அரிவாள், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய 10 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் வீட்டை விட்டு வெளியே வந்தவர்களை அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல், மேற்கூரையையும் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!