நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகள் கைது… நகைகள், போலி முத்திரைகள் பறிமுதல்

பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்க நகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி தங்க நகைகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என நகைக்கடைகள் அறிவிக்கின்றன.

நகைக்கடைகளில் தள்ளுபடி நியாயமான முறையில் தரப்பாட்டலும், இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி போலி நகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய தர நிர்ணய அலுவலர் மீனாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் கோவையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது நகையில் போலி 916 முத்திரையிடும் ஆசாமிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்ததுடன், போலி முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!