பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு உதவ ஒலிம்பிக் கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இருப்பார்கள். சிலர் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து இந்த ஓட்டல்களுக்கு சிறப்பு தானியங்கி மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போட்டியாளர்கள் வரும் 27ம் தேதி வந்ததும் ஒலிம்பிக் கிராமம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும்.

Translate »
error: Content is protected !!