பாலிவுட் நடிகை கரீனா கபூர் வீட்டிற்கு சீல்..!

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா விதிகளை மீறியதற்காக இருவரும் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் இருவரும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யுமாறு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!