பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து – சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110 ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சு மீதான 1 சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினையேற்று, பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது என்றார்.

 

 

Translate »
error: Content is protected !!