பெரியார் சிலையை அவமதித்த வழக்கு: கைதான இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்த‌து

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலையை அவமதித்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவரும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 10ம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டு இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொது ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!