நாளை புதுச்சேரி வரும் மத்தியக்குழு

புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய 22ந்தேதி மாலை மத்திய குழு வருகை தருகின்றனர்.

புதுச்சேரியில் அதி தீவிர கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் 22ந்தேதி மாலை 5 மணிக்கு வருகின்றனர். மழை சேத விபரங்களை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமியை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை செய்கின்றனர். தொடர்ந்து 23ந்தேதி காலையில் இருந்து புதுச்சேரி முழுவதும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்தியக்குழுவினார் மாலையில் காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்கின்றார்கள்.

Translate »
error: Content is protected !!