தமிழ்கத்தின் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வட தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும்.கடலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் வரும் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!