சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய்க்கு விற்பனை

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனையானது. 

நேற்று வரை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்கப்பட்டது. அதே சமயம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனையானது. தொடர்ந்து உயர்ந்து வந்த தக்காளி விலை, நேற்று லாரிகளில் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது கிலோ ரூ.80க்கு விற்பனையாகிறது. 

இந்நிலையில் இன்றும் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் இன்று மேலும் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!