6 சுரங்கப்பாதைகள் மூடல் – மக்கள் கடும் அவதி

சென்னையில் நள்ளிரவு முதலே பலத்த மழை பெய்து வருவதன் எதிரொலியாக நகரின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் மழை நீர் பெருக்கு காரணமாக ஆறு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி ஈ.வி.ஆர் சாலை கங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேஷபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!