கொலராடோ காட்டுத்தீ: தீ பரவியதால் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இரண்டு நகரங்கள் சாம்பலாயின. பலத்த காற்று காரணமாக காட்டுத் தீ மளமளவென பரவியதால் பல வீடுகள் தீயில் எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

அந்த மாகாணத்தின் பவுல்டர் பகுதியில் உள்ள 2 நகரங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் எரிந்து சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றனர். மேலும், காணாமல் போன 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!