ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம்

 

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கண்டனம்  தெரிவித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில்   கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஹரிஜப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் முகமதுஒலி தலைமை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், குழந்தைகள் உள்பட 1000-த்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

Translate »
error: Content is protected !!