ஒரே நாளில் 1,911 பேருக்கு கொரோனா உறுதி

 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 410 நபர்களுக்கும், காரைக்காலில் 331 பேர், ஏனாமில் 151 பேருக்கும், மாஹேவில் 19 பேருக்கும் என மொத்தம் ஆயிரத்து 911 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 16 ஆயிரத்து 394 நபர்கள் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 223 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 ஆயிரத்து 171 பேர் வீட்டில் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 165 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!