தமிழகத்தில் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 50 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 37 பேருக்கும், செங்கல்பட்டில் 31 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், நேற்று ஒரே நாளில் 705 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!