மருத்துவ கல்லூரியில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

 

தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளில்  மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் மொத்தம் 400 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் மைசூருவில் 2 செவிலியர் கல்லூரியில் பயிலும் 48 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலம் பொம்மக்கல்லில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 43 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!