கொரோனா தொற்று நிலவரம்

நாட்டில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 ஆயிரத்து 419 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், 1 லட்சத்து 36 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்ததால், மரணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 530ஆக அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!