இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்

 

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 528 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் பாதிப்பு விகிதம் 0.40 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 149 பேர் பலியாகியுள்ளதாகவும் இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரே நாளில் 3 ஆயிரத்து 997 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளதாகவும் 29 ஆயிரத்து 181 பேர் தொற்று பாதிப்புக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 180 கோடியே தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!