27 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 12 நபர்களுக்கும், காரைக்காலில் 9 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 27 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது மொத்தம் 314 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1869 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,26,405 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் இதுவரை 1,28,588 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை  அறிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!