கொரோனா தொற்று நிலவரம்

நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் ஆயிரத்து 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தீவிர தொற்று பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 43 பேர் பலியாகியுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் ஆயிரத்து 222 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளதாகவும், நாடு முழுவதும் 11 ஆயிரத்து 639 பேர் தொற்று பாதிப்புக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 185 கோடியே, 20 லட்சத்து 72 ஆயிரத்து 469 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!