இந்தியாவில் கொரோனா நிலவரம்

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 60 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 4 ஆயிரத்து 491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புக்கு  30 ஆயிரத்து 799 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் இதுவரை 180.80 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!